Monday, July 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 5

'சினம் கொளாமை'  ஒரு அடிமைத்தனமே!. கொடுமைகளைக் கண்டு சினம் கொள்பவன்தான் உண்மையான சிந்தனையாளன்.அவனே வலிமை மிகுந்த புரட்சியாளனாக மாறுகிறான். இதுதான் கடந்த கால வரலாறு.
அன்பின் வெளிப்பாடுதான் மனிதநேயம் . அந்த மனிதநேயமே மனித உரிமைக்கான களத்தை உருவாக்குகிறது. அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அந்தக் களம்தான் தீர்மானிக்கிறது.
 கவிஞர் சி. பன்னீர்செல்வம் என்பவர் 'சினம் கொளாமை' என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதியிருந்தார். அநியாயம், அக்கிரமம் கண்டு நாம் சினம் கொள்ளாமல் இருப்பதே மனித 
அவலங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர் சாடுகிறார்.   

பிரபஞ்சத்தின் பெரும் சினமே
இறந்த கால வரலாறு 
காற்றின் சினம்
சூறாவளியும் புயலும் 
கடலின் சினம் 
சுனாமிகள் 
பூமியின் சினம் 
பூகம்பம் எரிமலைகள் 
அறத்தின் எதிரொலி 
மனிதனின் கோபம் 
மனிதனின் 
சினமுறாத பூமியில் 
புதிய தர்மங்கள் சாத்தியமா?
கொலைகார தேசத்தின்
குரூர அரக்கனின் வெற்றியில்
மகிழ்ந்தாடும்
மனநோயாளிகளைப் பார்த்து
சினம் கொளாதிருக்க முடியுமோ ?
தேசத்தைக் கொள்ளையடிப்பவனிடம்
சினமுறாதிருத்தல் சாத்தியமா
மான்புடையவர்க்கு ?
கொலை கொள்ளை கற்பழிப்பும்
சாதிமத இன ஒடுக்கல்களும்
பசி வறுமை கண்ணீரும்
பெருக்கெடுத்தோடும் பூமியில்
சினம் கொளாமை
பேரவலம் அன்றோ !

பிறப்பால் மனிதரிடையே உயர்வு தாழ்வு கற்ப்பிக்கப் பட்டதை கண்டு  தந்தை பெரியார் சினம் கொண்டதால்தான், அவர் மதங்களை எதிர்த்தார்; கடவுளை மறுத்தார்; சமூக விடுதலைப் போரை நடத்தினார்.
இந்தி மொழியைத்  திணித்து தமிழ் மொழி அழிப்புக்கு வித்திட முயன்ற காங்கிரஸ் கட்சியின் மீது சினம் கொண்டதால்தான். தமிழ் மொழிப் பாதுகாப்புப் போராட்டத்தை பேரறிஞர் அண்ணா முன்னெடுத்தார். மொழி விடுதலைப் போரை நடத்தினார்.
இனத்தின் பூர்விக அடையாளம் அழிக்கபடுவதைக் கண்டு மாவீரன் பிரபாகரன் சினம் கொண்டதால்தான் 'எமக்கு எம் மண் வேண்டும்' என்று  சிங்கள அடக்குமுறையை எதிர்த்து மண் விடுதலைக்காக போராடினார். அதுவே   ஈழ விடுதலைப் போராக வெடித்தது  
சமுதாயக் கொடுமைகளைக் கண்டு சினம் கொண்டு பாடியவர்கள் மக்கள் கவிஞர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அதனால்தான் அவர்களின் கவிதைகள் இன்றும்    பேசப்படுகின்றன; அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது.  
இப்படி கொடுமைகள் கண்டு சினம் கொண்டவர்களை, குறிப்பாக சினம் கொண்ட தமிழர்களை  விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சினம் கொள்ளாமல் அடிமைகளாய் இருக்கிற தமிழர்கள்தாம் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்  என்பதுதான் கொடுமை.
தன்மான உணர்வு விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பூமியில் அமைச்சர்களெல்லாம் அடிமைகளைப் போல முதலமைச்சரின் காலை நோக்கியும்,'காரை' நோக்கியும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள்.
தமிழைப் பேசி, தமிழரின் வாக்குகளைப் பெற்று தமிழ் நாட்டை ஆளும் அதிகாரத்தை பெற்றவர்கள், அதே தமிழுக்கு எதிராக செயல்படும்போது, தமிழ்ப்பண்பாட்டை சிதைக்கும்போது தட்டிக் கேட்க தமிழர்கள் தயங்குவது அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே!
அரசியலில் மட்டுமல்லாமல் கல்வி, மருத்துவம், நீதித்துறை, நிர்வாகத்துறை என்று எல்லாவற்றிலும் இன்று தகுதியின்மையும், தரமின்மையும் ஒரு புறம் பெருகி வருகிறது; நேர்மையற்ற  தன்மைகளும்  நியாயமற்ற போக்குகளும் பரவி வருகின்றன.  ஆனால் இது பற்றியெல்லாம் சினம் கொள்ள யாரும் இல்லை என்பதுதான் வேதனை. சினம் கொள்வது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிற சிலர்  தங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை கருதியே சினம் கொள்ளும் திசையை தீர்மானித்துக் கொள்கிறார்கள். மக்களாட்சியின் நான்காம் தூண் என்று கருதப்படுகிற  ஊடகங்கள் கூட வேண்டிவர்களிடம் சினம் கொள்வதில்லை. வேண்டாதவர்களிடம் அளவுக்கு அதிகமாகவே சினம் கொள்கிறார்கள். வாழ்க்கையே வணிகமயம் ஆகிப்போனது. மனிதர்கள் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் எதன்  மீதும் எவர் மீதும் சினம் கொள்ள துணிவதில்லை.
,தமிழ் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கொடுமைகளை கண்டிப்பதில்  தங்களுக்கென்று தனித்தனி அளவுகோள்களை வைத்திருகிறார்கள். அதன்படி திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி கொட்டாவி விட்டாலும், ஏப்பம் விட்டாலும் அப்படி விட்டது தவறு என்றோ, விட்டமுறை சரியில்லை என்றோ செய்தியும் செய்திக்கட்டுரையும் வெளியிடுவார்கள். அவர் கொட்டாவி விடுவது கபட நாடகம் என்று ஒருவர் நெடுங்கட்டுரை எழுதுவார். இன்னொருவர் என்னைப்போல் நேர்மையாக ஏப்பம் விட கலைஞருக்குத் தெரியாது என்று ' money ' அருவி தேடி  இன்னொருவர் நேர்முகம் தருவார். இன்னும் பலருக்கு   கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் பார்த்துக் குரைத்தால்தான் விளம்பரம் கிடைக்கும். ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஜெயலலிதாவால் என்ன கேடு வந்தாலும் எல்லாவறையும் பொத்திக் கொண்டு அமைதியாகி விடுகிறார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டு நம் தமிழினம் உறங்கிக் கொண்டிருக்கிறது. தமிழினம் விழிப்பது எப்போது?
  
      

Thursday, February 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 4

ஆதிக்கவெறி  துணிவு ஆகுமா? - சமீரா மீரான்
2012 , பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்தவை பெரும் விவாதத்துக்கும்  விமர்சனத்துக்கும்  உள்ளாயின. விஜயகாந்த் கை நீட்டி பேசிய விதத்தைதான் பலரும் குறை கூறினார்களே தவிர, ஜெயலலிதா பேசிய விதம் சரியா?  என்று வெகு சிலர்தான் வினா எழுப்பினர். விஜய காந்தை விட நீண்ட அரசியல் அனுபவம் உள்ள  ஜெயலலிதா அன்று பேசியது  அரசியல்  நாகரித்துக்கு உகந்ததாக இல்லை. முகநூலில் பதிவர் ஒருவர் எழுதியிருந்தது நம்மை வெகுவாக சிந்திக்க வைத்தது. 
‘மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாமேதை மார்க்ஸின் தத்துவமே அதிர்ச்சிக்குள்ளாகும், ஜெ.வின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து!
தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரைசெயல்படமுடியாத முதல்வர்என்று பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஜெ.
நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட .தி.மு. தலைவர்களைஉதிர்ந்த ரோமம்என்று வர்ணித்து தனது தலைமைப் பண்பைக் காட்டினார்.
இரவு 10 மணிக்குத் தொடர்புகொள்ளமுடியவில்லை என்பதால், ‘இவரெல்லாம் பிரதமரா?’ என்று ராஜீவ்காந்தியை விமர்சித்தார்.
எம்.ஜி.ஆருக்குமோரில் விஷம் வைத்துக் கொடுத்தார்என்று ஜானகி அம்மாள் மீது குற்றம்சாட்டினார்.
தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகளில் நடந்த கொள்ளைகளுக்கு பிரதமர் நரசிம்மராவ்தான் தூண்டுதல் என்று குற்றம்சாட்டினார்.
ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம்தவறாக நடந்து கொள்ள முயன்றார்என்று பழிசுமத்தினார்.
அத்வானிக்குசெலக்டிவ் அம்னீஷியாநோய் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தைபல் இல்லாத ஆணையம்என்றார்.
சோனியா காந்தியைபதிபக்தி இல்லாதவர்என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தைகாலி டப்பாஎன்றார்.
பா.. நிறுவனர் ராமதாஸைபயந்தாங்கொள்ளிஎன்றார்.
கம்யூனிஸ்ட்டுகளைஉண்டியல் குலுக்குபவர்கள்என்றும், மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடி செய்ததால்தான் தொடர்ந்து வெற்றிபெற்றார்கள் என்றும் சொன்னார்.
விஜயகாந்த்தை ஏற்கனவேகுடிகாரர்என்ற பொருள்பட வர்ணித்தவர் இப்போது மீண்டும், ‘தகுதி இல்லாதவர்’, ‘கீழ்த்தரமானவர்என்றும் விமர்சித்துள்ளார்.
தனக்கும் தன் கட்சிக்கும் துணை நின்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதிலிருந்து ஜெ. இதுவரை மாறவில்லை. மாற்றத்தை எதிர்பார்த்து அவருடன் கூட்டணி சேர்ந்தவர்களும் வாக்களித்தவர்களும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களான கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் . அன்பழகன் போன்றாரைப் பற்றி ஜெயலலிதா சொன்னவற்றை தன் பட்டியலில் இந்தப் பதிவர் சேர்க்கவில்லை. அதையும் சேர்த்தால் ஜெயலலிதாவின் அடாவடி அரசியல் குறித்து ஒரு பெரிய புத்தகமே தயாரித்து விடலாம்.
 நியாயங்களை காயப்படுத்தாதே !  அந்த காயங்களை நியாயப்படுத்தாதே!!.சொன்னவர் அறிஞர் அண்ணா அவர்கள். ஆனால்,  அந்த அண்ணாவின் பெயரை கொண்ட கட்சியை நடத்தும் ஜெயலலிதாவோ நீதிமன்ற கண்டிப்புக்கு அதிகமாக ஆளான முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . நீதியையும் ,நியாயத்தையும் குழி தோண்டி புதைப்பதே அவருடைய கொள்கையாக கொண்டுள்ளார். தனது பேச்சால், செயலால் யார் காயப்பட்டாலும், எத்தனை பேர் துன்பப்பட்டாலும் அது பற்றி கொஞ்சமும் கவலைபடாத ஒருவர் ஜெயலலிதா. பல தருணங்களில் மனிதநேயம் மறந்து பேசுகிற, செயல்படுகிற ஜெயலலிதாவை சிலர் துணிச்சல்காரர் என்று போற்றுகின்றனர். ஆதிக்க வெறியை  துணிச்சல் என்று கூறினால், மகாத்மா காந்தியை  கொன்ற கோட்சேவையும்  துணிச்சல்காரன் என்று சொல்லலாமே